ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என கலக்கும் நிகழ்ச்சி 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் ஷோவான இது, தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தீபன், பரீனா, மதன், ரேகா கிருஷ்ணப்பா மற்றும் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா உட்பட 10 சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் திருமணமாகி போட்டியில் கலந்து கொண்டுள்ள அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடிக்கு ஏரளாமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் தனிபட்ட சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.