பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் | 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் | மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம் | தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் | 2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி' |

சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என கலக்கும் நிகழ்ச்சி 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் ஷோவான இது, தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தீபன், பரீனா, மதன், ரேகா கிருஷ்ணப்பா மற்றும் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா உட்பட 10 சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் திருமணமாகி போட்டியில் கலந்து கொண்டுள்ள அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடிக்கு ஏரளாமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் தனிபட்ட சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.




