இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என கலக்கும் நிகழ்ச்சி 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் ஷோவான இது, தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தீபன், பரீனா, மதன், ரேகா கிருஷ்ணப்பா மற்றும் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா உட்பட 10 சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் திருமணமாகி போட்டியில் கலந்து கொண்டுள்ள அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடிக்கு ஏரளாமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் தனிபட்ட சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.




