'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டு விட்டு ராம்சரண் மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் படங்களை இயக்கப் போவதாக முடிவெடுத்த ஷங்கருக்கு பல வழிகளில் இருந்தும் சிக்கல்கள் எற்பட்டது. இந்தியன்-2 படத்தை இயக்கி முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றம் சென்றது. அதையடுத்து ரன்வீர்சிங் நடிக்கும் படம் அந்நியன் ஹிந்தி ரீமேக் என்றதால், அந்த படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்சும் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.
அதன்பிறகு ஒருவழியாக அந்த இரண்டு சிக்கல்களையும் கடந்து ராம்சரண் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினார் ஷங்கர். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கப்போகும் அந்த கதை தனக்கு சொந்தமானது என்று கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர் செல்வமுத்து என்பவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தற்போது எழுத்தாளர் சங்கம் டைரக்டர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர் செல்வமுத்து ஆகிய இருவரின் ஸ்கிரிப்டுகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பிரச்சினையின் முடிவு என்னவாக இருக்கப்போகிறதோ? வெயிட் பண்ணி பார்ப்போம்.