ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் |

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள கன்னட நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின.
சமூக வலைத்தளங்களில், தமிழ் படங்களில் நடித்தவரும், செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் சோதனை நடந்ததாக தகவல் பரவியது. சமூக வலைத்தளங்களில் சோனியா அகர்வாலின் படத்துடன் இந்த தகவல் வைரல் ஆனது.
இந்த நிலையில் நான் அவளில்லை. என் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்ன நடந்தது என்று தெரியாமலே, கிடைத்த தகவலை உறுதி செய்யாமலேயே பகிர்ந்து விடுகிறார்கள். பொதுவாக சமூக வலைதள வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றாலும் இது மிகவும் தீவிரமான ஒரு விஷயம். குறைந்தபட்சம் என்னை அழைத்தாவது உறுதி செய்திருக்க வேண்டும்.
என் மீது அவதூறு பரப்பியதற்காவும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன், என்கிறார் சோனியா அகர்வால்.