காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய படங்களின் அப்டேட்டுகள் கடந்த ஒரு வாரமாகவே வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் பார்வையை வெளியிட்டார்கள்.
நேற்று சூர்யாவின் 40வது படமாக அழைக்கப்பட்டு வந்த படத்தின் தலைப்பாக'எதற்கும் துணிந்தவன்' என்பதை அறிவித்தார்கள். இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.
இன்று மாலை சூர்யாவின் 39வது படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள். பொதுவாக வரிசையாகத்தான் படங்களின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், சூர்யா கடந்த சில வருடங்களில் சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டிய படம், ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ஆகியவற்றால் அவர்களது படங்களின் வரிசையில் குழப்பம் நீடித்தது.
எனவே தான் 40வது படத்தின் அறிவிப்புக்குப் பிறகு 39வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சூர்யாவின் 40வது படம் 'எதற்கும் துணிந்தவன்', 41வது படம் 'வாடிவாசல்'. இவற்றிற்கு அடுத்து சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. ஹரி - சூர்யா இணைவதாக அறிவிக்கப்பட்ட 'அருவா' படம் நடக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.




