மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய படங்களின் அப்டேட்டுகள் கடந்த ஒரு வாரமாகவே வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் பார்வையை வெளியிட்டார்கள்.
நேற்று சூர்யாவின் 40வது படமாக அழைக்கப்பட்டு வந்த படத்தின் தலைப்பாக'எதற்கும் துணிந்தவன்' என்பதை அறிவித்தார்கள். இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.
இன்று மாலை சூர்யாவின் 39வது படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள். பொதுவாக வரிசையாகத்தான் படங்களின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், சூர்யா கடந்த சில வருடங்களில் சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டிய படம், ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ஆகியவற்றால் அவர்களது படங்களின் வரிசையில் குழப்பம் நீடித்தது.
எனவே தான் 40வது படத்தின் அறிவிப்புக்குப் பிறகு 39வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சூர்யாவின் 40வது படம் 'எதற்கும் துணிந்தவன்', 41வது படம் 'வாடிவாசல்'. இவற்றிற்கு அடுத்து சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. ஹரி - சூர்யா இணைவதாக அறிவிக்கப்பட்ட 'அருவா' படம் நடக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.