தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்த படம் டெடி. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார், இமான் இசை அமைத்திருந்தார், யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
ஒரு கரடி பொம்மைக்குள் புகுந்து கொண்ட ஒரு பெண்ணின் உயிர் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஆர்யாவின் துணையோடு பழிவாங்கும் கதை. கூடவே மருத்துவ உலகில் நடக்கும் உறுப்பு திருட்டு மாபியாவையும் இப்படம் பேசியது. கடந்த மார்ச் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. நேற்று (ஜுன் 13) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இது தொடர்பாக ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: என்னுடைய படம் டெடி ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. குழந்தைகள் இந்த படத்தை திரும்ப, திரும்ப பார்த்து மகிழ்ந்தார்கள். இமானின் பாடல்கள்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பானதும் சந்தோஷமாக இருக்கிறது. டெடி 2ம் பாகத்துக்கான வேலைகளில் நம்ம ஊர் கிறிஸ்டோர் நோலன் (ஹாலிவுட் இயக்குனர்) சக்தி சவுந்தர்ராஜன் இறங்கி விட்டார். கண்டிப்பாக 2ம் பாகம் பண்ணப் போகிறோம். நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்றார்.




