ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் நாவல்கள் படிக்கும் வாசகர்கள் பலரும் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அந்த நாவலைப் படிக்கும் போதே நம் கண்முன் கற்பனையில் காட்சிகள் விரியும். அந்த நாவலை சினிமாவாகப் பார்க்க மாட்டோமா, சீரியலாகப் பார்க்க மாட்டோமோ என பலரும் ஏங்கியிருக்கிறார்கள். சீரியலாகவும், அனிமேஷன் தொடராகவும் ஆரம்பிப்பதாகச் சொன்ன பலரும் பின் அது பற்றி வாயே திறக்கவில்லை.
இந்தியத் திரையுலகத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய இயக்குனர்களில் ஒருவரான தமிழ்த் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க முன்வந்து அதை ஏறக்குறைய முடித்தும் விட்டார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், லால், அஷ்வின் கக்குமனு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைக்க இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தாய்லாந்தில் ஆரம்பமாகி நடந்தது. அதன்பின் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்தது.
இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாகத்திற்கான குறிப்பிடத்தக்க படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது ஒரு வாள் மட்டும் கொண்ட ஒரே ஒரு போஸ்டரை வெளியிட்டார்கள். அதன்பின் இப்படம் பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை.
இன்று மணிரத்னம் பிறந்தநாள் என்பதால் ஏதாவது அப்டேட் வரும் என்று அவருடைய ரசிகர்களும், 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், எதுவும் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.