சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
'சிம்பு நடிக்க, சுசீந்திரன் இயக்கிய, ஈஸ்வரன் படத்தில், பாம்பை பயன்படுத்தியதற்கு, விலங்கு நல வாரியத்தில் அனுமதி பெறவில்லை என, புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், படக்குழுவினர், விலங்குகள் நலவாரியத்தில் விளக்கமளித்தனர்.அதில், நிஜ பாம்பை பயன்படுத்தவில்லை என்றும், கிராபிக்ஸ் செய்தே, நிஜ பாம்பை காட்சி படுத்தியதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில், ஈஸ்வரன் பட போஸ்டரில், உயிருள்ள பாம்பு பயன்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள விலங்குகள் நலவாரியம், பாம்பை பயன்படுத்தியதற்கு அனுமதி பெறாத, போஸ்டர் மற்றும் டீசரை நீக்க, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.