பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்” | எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து |

இந்திய மில்லினியர்களில் ஒருவரும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமண விழா நவ.,16-ல் நடக்க இருக்கிறது. இந்தியாவிலேயே ஆடம்பரமான திருமணமாக இது இருக்கப்போகிறது. அழைப்பிழுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவிடுகிறார்கள். ஒரு அழைப்பிதழின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு திருமணத்துக்கு முந்தைய நலுங்கு சடங்குகள் நடந்தது. இதில் ரெட்டி குல வழக்கப்படி பெண்கள் ஆடிப்பாடுவது வழக்கம். மணமகளை குதூகலப்படுத்துவதற்காக இப்படி செய்வதுண்டு.
தென்னிந்திய மொழிகளிலிருந்து மணமக்களை வாழ்த்தும் 40 திரைப்பட பாடல்கள் தொகுக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடல் ஒலித்தபோது தமிழ் நடிகைகள் சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனமாடினர். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. நடனம் ஆடுதற்காகவே பெரும் தொகை சம்பளமாக கொடுத்து இவர்கள் அழைத்து வரப்பட்டனர் என்று ஒரு சாராரும், மணவீட்டாரின் அழைப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியால் ஆடினார்கள் என்று ஒரு சாராரும் தெரிவிக்கிறார்கள்.




