Advertisement

சிறப்புச்செய்திகள்

மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொந்த படமெடுத்தால் வீடு போய்விடுமே! - உஷாரான டி.பி.கஜேந்திரன்

25 நவ, 2014 - 10:27 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் விசுவின் பாசறையில் இருந்து வந்தவர் டி.பி.கஜேந்திரன். வீடு மனைவி மக்கள் என்ற படம் மூலம் என்ட்ரியான இவர், எங்க ஊரு காவல் காரன், எங்க ஊரு மாப்பிள்ளை, தாயா தாரமா, பெண்கள் வீட்டின் கண்கள் என வரிசையாக குடும்ப பின்னணி கொண்ட படங்களாக இயக்கி வந்தார். ஒரு கட்டத்தில் நடிகராகவும் களமிறங்கிய அவர், படம் இயக்குவதை தொடர்ந்தார்.


ஆனால், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற படங்களுக்குப்பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது. இருப்பினும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு பட நிறுவனத்துடன் கைகோர்த்தபடி விவேக் நடித்த மகனே என் மருமகனே என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதோடு, கடனாளியான கஜேந்திரன், தனது ஒரு வீட்டை விற்றுத்தான் அந்த கடனை அடைத்தார்.


அதனால் சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவருக்கு மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட, கடந்த சில மாதங்களாக அதற்கான முயற்சியில் ஈடபட்டு வந்தார். அவர் சொன்ன கதையை நம்பி ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன்வந்தாராம். ஆனால், இவர் பட வேலைகளை தொடங்கியபோது, திடீரென்று அந்த பட அதிபர் படத்தில் இருந்து கழன்று கொண்டாராம்.


இருபபினும் அந்த படத்தில் சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள், கதை நன்றாக இருக்கிறது படத்தை நீங்களே தயாரித்து இயக்குங்கள் என்று டி.பி.கஜேந்திரனை நச்சரித்து வந்தார்களாம். அதைக்கேட்டு டென்சனான அவர், எல்லோரும சொல்வீர்கள். கடைசியில் படம் ஓடவில்லை என்றால், எஞ்சியிருக்கிற எனது இன்னொரு வீடும் காலியாகி விடுமே. அதையடுத்து நான் வாடகை வீட்டில்தான் குடியேற வேண்டியதிருக்கும். இந்த நிலை எனக்கு தேவையா? தயாரிப்பாளர் கிடைத்தால் மீண்டும் படம் இயக்குவேன் இல்லையேல் முழுநேர நடிகராகி விடுவேன் என்று கூறி விட்டாராம் அவர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !