ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'திரிஷ்யம் 3' படம் இன்று வெளியாகி உள்ளது. கேரளாவில் மட்டுமே சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளதாக படத்தின் நாயகன் மோகன்லால் பெருமையுடன் இன்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், படத்தின் முதல் காட்சியைப் பார்த்ததுமே ரசிகர்கள் தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் பற்றிய விமர்சனங்களை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
படம் நிறையவே ஏமாற்றிவிட்டது என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது. படத்தின் கடைசி 15 நிமிடங்கள் தவிர திரைக்கதையில் எந்தவிதமான பரபரப்பும் இல்லை என்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்திற்கு இப்படியான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'பேட்ரியாட்' படம் மே 1ல் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக அடுத்த அதிர்ச்சியா என மலையாள ரசிகர்கள், குறிப்பாக மோகன்லால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.