நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் 'திரிஷ்யம் 3' மே 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது முன்பதிவின் மூலமாக மட்டும் சுமார் 20 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களில் இது இன்னும் அதிகமாகலாம் என்கிறார்கள். இப்படியே போனால் முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 30 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
கேரளாவில் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி வருகின்றன. வெளிநாடுகளிலும் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மே 1ல் வெளியான 'பேட்ரியாட்' படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் மோகன்லால் தனி நாயகனாக நடித்துள்ள 'திரிஷ்யம் 3' படத்திற்கான வரவேற்பு அமோக உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.