நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழக அமைச்சரவையில் இளம் பெண் அமைச்சராகப் பதவியேற்றுள்ளவர் கீர்த்தனா. அவருக்கு தொழில் துறை இலாகா நேற்று ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அவரை நடிகை ரேவதி திடீரென சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, “நேற்று இரவு உணவகத்தில் ஒரு பழக்கமான முகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் நண்பர் ஒருவர் அது கீர்த்தனா என்று சுட்டிக் காட்டினார். அவர் தவெக-வின் இளைய எம்.எல்.ஏ., சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996-ல் பிறந்தவர், கணிதத்தில் பி.எஸ்.சி. மற்றும் புள்ளியியலில் எம்.எஸ்.சி. படித்தவர். கடந்த பத்து வருடங்களாக முக்கிய அரசியல் கட்சிகளுடன் உத்தியாளராகப் பணியாற்றி, வேலையிலேயே கற்றுக்கொண்டவர்… மாற்றமாக இருப்பதில் கவனமும் உறுதியும் தான் அவர் பேசியது.
எதிர்கால அரசியலும் அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் — தங்கள் பணியைச் செய்யும், மக்களிடையே நடந்து பிரச்னைகளைத் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டு, மக்களுடன் இணைந்து தீர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்… கீர்த்தனா தன் கொள்கைகளில் உறுதியாக இருந்து, வாக்காளர்களுக்கு வாக்குறுதியளித்த பாதையில் நடக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
சக்தி அவருக்கு வலிமையாக இருக்கட்டும், பலவீனமாக அல்ல. தொலைநோக்கு கொண்ட இத்தகைய இளைஞர்கள் நம் அரசில் பங்கேற்பதைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.