ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி |

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக இன்று ரிலீசாகவில்லை. இந்த நிலையில், மும்பை, புனே, வாரணாசி போன்ற நகரங்களில் உள்ள தியேட்டர்களில் படம் ரிலீசானது. அங்கிருந்த தியேட்டர்களில் எடுக்கப்பட்ட படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு விசாரித்ததில், அனுமதி இன்றி க்யூப் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது தெரியவந்தது.
மற்ற மாநிலங்களில் அனுமதியின்றி க்யூப் நிறுவனம் படத்தை வெளியிட்டது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சிவா, தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமார் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கருப்பு படம், மும்பை, புனே, வாரணாசியில் படம் திடீரென ஒளிபரப்பப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக அந்த தியேட்டர்களை கண்டறிந்து தகவல் சொன்னதும், காட்சிகள் நிறுத்தப்பட்டன.
க்யூப் நிறுவனத்தில் படம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலையில், எப்படி படம் அங்கு அனுமதியின்றி ரிலீஸ் ஆனது எனத் தெரியவில்லை. ஜனநாயகன் படம் ரிலீசுக்கு முன்பாகவே இணையத்தில் கசிந்ததுபோல், தற்போது கருப்பு படமும் பைரசி தளங்களில் வெளியாகிவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி க்யூப் நிறுவனத்திடம் கேட்டதில், ஊழியரின் தவறால் நடந்ததாக சொல்கின்றனர். இதனை கண்டிக்கிறோம். பெரிய நடிகர்களின் படங்களுக்கே இப்படியான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனைத்து படங்களுக்கும் இதே சூழல் வரலாம். மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால், அதற்கான இழப்பீடு கேட்டுள்ளோம். அவர்களின் குழுவுடன் ஆலோசித்து இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளனர்.
படம் பற்றிய சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று இரவுக்குள் படம் ரிலீசாகும் என நம்புகிறோம். அதற்காகதான் போராடி வருகிறோம். பைனான்சியர்களும் இன்றைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். 90 கோடி ரூபாய் ஓடிடி வரும் என எதிர்பார்த்தநிலையில் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தே படத்தை ரிலீஸ் செய்கிறோம். இரவுக்குள் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடிகர் சங்கம் கண்டனம்
ஜனநாயகன் படம் சமூக ஊடகங்களில் கள்ளத்தனமாய் வெளிவந்து ஏற்பட்ட காயம் ஆறும் முன்பே “கருப்பு” திரைப்படம் வடமாநிலங்கள் சிலவற்றில் அதிகாரபூர்வமாய் வெளியாகும் முன்பே திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு திரைப்படத்தை இப்படி கவனக்குறைவாய் எப்படி ஒரு பெரும் நிறுவனம் கசியவிட்டிருக்கும் என்ற ஒரு ஐயமும் நம்பிக்கையின் பேரில் கேள்விகுறியும் எழுகிறது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் அதற்கான ஈட்டை சரிசெய்ய முற்பட வேண்டும் அதுமட்டுமில்லாமல் கசிய விட்டவர்களை கடுமையாக தண்டித்து வருங்காலத்தில் கவனக்குறைவிற்கு இது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
இதில் பல கோடிகள் மட்டுமல்ல பல கலைஞர்களின், தொழிலாளர்களின் வியர்வை சிந்திய உழைப்பும் எதிர்காலத்தை பற்றிய கனவும் உள்ளடங்கியிருக்கிறது. வருங்காலத்தில் இது சம்பந்தமான கடுமையான விதிமுறைகளும், வழிமுறைகளும் வகுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இச்சூழலில் தமிழ் திரையுலகின் அங்கத்தினர்கள் யாவரும் ஒன்றாய் நின்று கண்டிக்கவும் போராடவும் தயாராக நிற்கிறோம். இத்தருணத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு என்றும் போல் துணையாய் நின்று குரல் கொடுக்க தவறாது.