பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியை காதலித்து வருகிறார். அவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் கெனிஷா தன்னைப் பற்றி பேசவும், சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஆர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற நீதிமன்றம், ஆர்த்தி ரவிக்கு எதிராக சமூக வலைதளங்கள் அல்லது பொதுவெளியில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்யவோ, பேசவோ கெனிஷாவுக்கு தடை விதித்துள்ளது. அதோடு கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான அவதூறு கருத்துக்கள் மற்றும் ஆர்த்தி ரவிக்கு எதிரான பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டது.