கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஹிந்தியில் கடந்த டிசம்பர் மற்றும் மார்ச் என அடுத்தடுத்து நான்கு மாத இடைவெளியில் துரந்தர் மற்றும் அதன் இரண்டாம் பாக படங்கள் வெளியாகின. ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் 1300 கோடியும், இரண்டாம் பாகம் 1700 கோடியும் என கிட்டத்தட்ட மொத்தமாக 3000 கோடி அளவிற்கு வசூலித்து சாதனை படைத்தது. இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றால் இயல்பாகவே மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கும்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்றாம் பாகத்தை எடுக்கும் ஆர்வமும் கூட இருக்கும்.
இந்த நிலையில் தான் துரந்தர் படத்தின் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது "துரந்தர் கதையை நாங்கள் இன்னும் முடிக்கவில்லை, இந்த ஆண்டின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது" என்று அறிவித்துள்ளார்.
அந்த வகையில் துரந்தர் 3 உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அவர் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.