'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

நட்புக்கு இலக்கணமாக விஜயகாந்த்- அ.செ.இப்ராஹிம் ராவுத்தரை சொல்வார்கள். இருவருமே பால்ய கால நண்பர்கள். இருவருமே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள். விஜயகாந்த் நடிப்பு ஆசையில் சென்னை வந்து கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்காகவே தயாரிப்பாளராக மாறியவர் இப்ராஹிம் ராவுத்தர்.
ராவுத்தர் பிலிம்ஸ், தமிழன்னை சினி கிரியேஷன், ஐ.வி கிரியேஷன் என 3 தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி விஜயகாந்தை வைத்து மட்டும் 17 படங்கள் தயாரித்தார். இதுதவிர பார்த்திபன், அருண் பாண்டியன், பாண்டியனை வைத்து சில படங்களையும் தயாரித்தார்.
இப்ராஹிம் ராவுத்தருக்கு தான் ஒரு கதை எழுதி அந்த கதையில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அப்படி அவர் எழுதிய கதைதான். 'பாட்டுக்கு ஒரு தலைவன்'. ஒரு எம்.எல்.ஏ மகளுக்கும், நடுத்தர குடும்பத்து இளைஞனுக்குமான காதலும், பிரச்சினைகளும்தான் கதை.
இதில் விஜயகாந்த், ஷோபனா, நம்பியார், கே.ஆர்.விஜயா, லிவிங்ஸ்டன், எஸ்.எஸ்.சந்திரன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லியாகத் அலிகான் இயக்கி இருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட், படம் ஹிட்டாகவில்லை.