புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

மறைந்த பிரபல மலையாள குணச்சித்ர நடிகரான திலகன் தமிழில் 'சத்ரியன், மேட்டுக்குடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் தமிழ் ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்றவர். அவரது மகன் ஷம்மி திலகன் தற்போது மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். தமிழில் 'கஸ்தூரிமான், ஜில்லா' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது மகனும் திலகனின் பேரனுமான அபிமன்யு திலகன் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் குறிப்பாக வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் கடந்த 2009ல் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரேணிகுண்டா படத்தில் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. அதில் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் அபிமன்யு திலகன். இந்த படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்து விட்டதாகவும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்து விட்டது என்றும் ஒரு தகவலை சமீபத்தில் கூறியுள்ளார் அபிமன்யு திலகன்.




