புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில், வரும் ஏப்ரல் 16ம் தேதி வெளியாக இருக்கும் படம் பூத் பங்களா. தபு, வாமிகா கபி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஏக்தா கபூர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் பேசியபோது, “இதற்கு முன்னதாக முதன்முறையாக நான் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை தயாரித்தேன். அந்த படம் சரியாக போகவில்லை. உடனே அக்ஷய் குமார் என்னை அழைத்து ஒரு மிகப்பெரிய தொகையை செக் போட்டு நஷ்ட ஈடாக நான் கேட்காமலேயே என்னிடம் கொடுத்தார். என் 30 வருட சினிமா பயணத்தில் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை” என்றார்.
உடனே அங்கிருந்த நடிகை தபு, “அப்படி என்றால் நாம் இணைந்து பணியாற்றிய 'க்ரூ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் கிடைத்த லாபத்தில் எங்களது பங்கை எப்போது தரப் போகிறீர்கள் ?” என்று ஜாலியாக கேட்டார்.
அதற்கு ஏக்தா கபூர், “எப்போதாவது தயாரிப்பாளர் இப்படி லாபத்தில் யாருக்காவது பங்கு தந்திருக்கிறார்களா என்ன ?” என்று கேட்டதும் அதற்கு உண்மைதான் என்று தலையசைத்து ஆமோதித்தார் தபு.