மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. அவரும் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் இருவரையும் சேர்த்து பல்வேறு செய்திகள், யூகங்கள், வதந்திகள் என வந்து கொண்டே இருக்கிறது.
கடந்த சில தினங்களாக சினிமாவை விட்டு விலக த்ரிஷா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன. அது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலரும் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அவற்றிற்குப் பதிலளிக்கும் விதத்தில் காட்டமான பதிவு ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.
அதில் “கேள்விப்பட்டவரை, நான் திரைப்படங்களை விட்டு விலகிவிட்டேனாம்; ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு, நேற்றுதான் இரண்டு வயதை எட்டிய நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேனாம்! வேறு எதையாவது நான் இதில் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய 'கற்பனைக் கதைக்கான ஒதுக்கீடு' இத்துடன் நிறைவடைந்துவிட்டதா?” என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக தன்னைப் பற்றிய பல செய்திகளைக் கடந்து போகும் த்ரிஷா, தற்போது அதற்கு காட்டமாக பதிலளித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.