தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

1939ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் 'தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்' . உலக புகழ்பெற்ற இந்த படத்தை தழுவி மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தால் தயாரித்து இயக்கப்பட்ட படம் 'உத்தமபுத்திரன்'. பெரிய வெற்றி பெற்றதுடன், இதில் இரட்டை வேடத்தில் நடித்த பி.யூ.சின்னப்பாவை ஆக்ஷன் ஹீரோவாக்கியது.
இதே படத்தை சற்று மேம்படுத்தி திரைக்கதை, வசனம் எழுதினார் ஸ்ரீதர். அதே பெயரில் இந்தப் படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்தார். பத்மினி, ராகினி ஹீரோயின்களாக நடித்தார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடக்கும்போது இதே படம் எம்ஜிஆர் நடிக்க இன்னொரு கம்பெனி தயாரிக்க ஏற்பாடு செய்து வந்தது. அப்போது பிரபலமாக இருந்த ராம்நாத் இயக்குவதாக முடிவாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், எம்ஜிஆரோடு மோத வேண்டாம் இந்த ப்ராஜக்டை டிராப் செய்து விடலாம் என்று தனது பங்குதாரர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அவர் படமும் வரட்டும், சிவாஜி படமும் வரட்டும் மக்களுக்கு எந்த படம் பிடிக்கிறதோ பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டனர்
ஒரே நாளில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன் என்றும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தம புத்திரன் என்றும் இரண்டு தனித்தனி விளம்பரங்கள் ஒரே பத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் இந்த போட்டியில் இருந்து எம்ஜிஆர் விலகிக் கொண்டார். படத்தை பிரகாஷ்ராவ் இயக்கினார்.
பின்னாளில் இதுகுறித்து பேசிய எம்ஜிஆர். “என்னை விட சிவாஜி அந்த படத்திற்கு பொருத்தமானவர். நான் நடித்து அற்புதமான அந்த கதையை வீணாக்க விரும்பவில்லை. அதோடு என்னை தயாரிப்பாளர்கள் அணுகியபோதே இந்த கதைக்கு சிவாஜிதான் பொருத்தமாக இருப்பார் அவரை போய் பாருங்கள் என்றுதான் சொன்னேன். என்று கூறினார்.