மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

நடிகர் சல்மான்கான் தற்போது ஹிந்தியில் மாத்ருபூமி என்கிற படத்தில் நடித்து வருகிறார். அபூர்வா லகியா இயக்கி வரும் இந்த படம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது.. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சல்மான்கான் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்குகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக இணைந்துள்ளார் நயன்தாரா. “மாட்சிமை பொருந்திய மற்றும் பன்முகத்தன்மையின் சிகரமான ராணி வருகிறார்” என்று கூறி நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஹிந்தியில் அடியெடுத்து வைத்தார் நயன்தாரா.. தற்போது இரண்டாவது படத்தில் இன்னொரு முன்னணி ஹீரோவாக சல்மான்கான் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.