ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழ் சினிமாவிற்கும் 3டி தொழில்நுட்பத்திற்கும் ராசியே இல்லை. தமிழில் ஒரு சில படங்கள்தான் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அனைத்து படங்களும் தோல்வி அடைந்தது. 'மைடியர் குட்டிச்சாத்தான்' பெரும் வெற்றி பெற்றபோது ஏவிஎம் நிறுவனம் ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் 3டி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் ரஜினி மறுத்து விட்டார். '3டி தொழில் நுட்பத்தில் படம் எடுத்தால் மக்கள் அந்த தொழில்நுட்பத்தைத்தான் ரசிப்பார்கள் படத்தின் கதையை விட்டுவிடுவார்கள்' என்று கூறிவிட்டார்.
தமிழில் தோல்வியை சந்தித்த மற்றுமொரு 3டி படம் 'தங்கமாமா'. சைமன் வி.குரியன் என்ற மலையாள இயக்குனர் இயக்கினார். அருண் என்ற புதுமுகத்துடன் சசிகலா நடித்தார். நம்பியார் உள்ளிட்ட மேலும் சிலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 1985ல் வெளியான இந்த படமும் 'அன்னை பூமி' படம் போன்றே தோல்வி அடைந்தது.
பிற்காலத்தில் வெளிவந்த 'அம்புலி' என்ற 3டி படம்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.




