சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து |
மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'எல் 2 எம்புரான்'. கடந்த 2019ல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகி இருந்தாலும் கூட லூசிபர் படம் வெளியான போது எந்தவித சலசலப்பும் ஏற்படவில்லை.
அதே சமயம் தற்போது வெளியாகி உள்ள இதன் இரண்டாம் பாகத்தில் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. படத்தின் நாயகன் மோகன்லாலே இதற்காக வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மோகன்லாலை வைத்து தொடர்ந்து ராணுவ பின்னணி கொண்ட படங்களாக இயக்கி வந்த இயக்குனர் மேஜர் ரவி தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது, “மோகன்லால் பொறுத்தவரை அவர் எப்போதுமே ரிலீஸுக்கு முன்பு தனது முழு படத்தையும் பார்க்கும் வழக்கம் கொண்டவர் அல்ல. தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதோடு மட்டுமே அவர் தனது பணிகளை நிறைவு செய்து விடுகிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் எம்புரான் படத்தில் அவர் இடம்பெறும் மொத்த காட்சிகளே ஒரு மணி நேரம்தான் இருக்கின்றன. அதனால் மீதி என்ன காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து அவரது கவனத்திற்கு வராமல் போய் இருக்கலாம். அப்படி அவர் முழு படத்தையும் பார்த்து இருந்தால் நிச்சயம் இது போன்ற காட்சிகளை அனுமதித்திருக்கவே மாட்டார்” என்று கூறியுள்ளார். மோகன்லாலுக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.