பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி எழுதிய நாவல் 'அலைகள் ஓய்வதில்லை'. கடல்புறத்து மீனவ மக்களின் வாழ்க்கையையும், அவர்களது காதலையும் யதார்த்தமாக சொன்ன நாவல். இந்த கதையைத்தான் சிவகுமார், ராதா, அருணா, சிவச்சந்திரன், கவுண்டமணி நடிக்க 'ஆனந்த ராகம்' என்ற பெயரில் படமாக இயக்கினார் பரணி. நாவலை திரைக்கதையாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்.
நாவலில் இருந்த மீனவ மக்களின் வாழ்வியலை விட்டு விட்டு காதலை மட்டும் எடுத்துக் கொண்டு அதையும் சொதப்பி உருவானது படம். கடும் விமர்சனத்தை சந்தித்த படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தை ஓரளவிற்கு காப்பாற்றியதும், நிலைத்து நின்றதும் இளையராஜாதான். கடலோரம்..., கனவுகளே... மேகம் கருக்குது... ஒரு ராகம் ஆகிய பாடல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டது.
பின்னாளில் நாவல் ஆசிரியர் தாமரை செந்தூர் பாண்டி தனது நாவலை திரைப்படமாக்கி சிதைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். அதன்பிறகு தனது நாவல்களை தானே படமாக இயக்கினார்.