வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்ந்து வந்த சிம்பு, தற்காப்பு கலைகளையும் கற்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் பிஸ்னஸ் என பல காரணங்களால் இந்த படத்தினை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியது.
ஆனாலும், இந்த கதையை விட மனமில்லாமல் சிம்புவே இதற்கான முன் தயாரிப்பு பணிகளின் செலவை செய்து வந்தார். மறுபுறம் வேறு தயாரிப்பாளரை தேடி வந்தார். இந்த நிலையில் தற்போது ஒருமனதாக சிம்புவே இந்த படத்தை ஆட்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்க இருப்பதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிம்பு, தனது தந்தையின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்கள் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.