Advertisement

சிறப்புச்செய்திகள்

தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: அந்நாளில் கலையுலகில் புதுமை படைத்த “அந்தநாள்”

27 அக், 2024 - 01:08 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Andha-Naal


ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் என எதுவுமில்லாத ஒரு தமிழ் திரைப்படத்தை நாம் காண இயலுமா? அப்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்கத்தான் முடியுமா? என்றால், முடியும் என நிரூபித்துக் காட்டியது ஏ வி எம் நிறுவனம். தொழில்நுட்ப வசதி வளர்ச்சியடையாத 1954லிலேயே இப்படி ஒரு புதுமையை செய்து, தமிழ் திரையுலகில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது ஏ வி எம் தயாரிப்பு நிறுவனம். வணிக ரீதியான திரைப்படங்களை தயாரித்து கோடிகளில் புரளும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில், வணிக ரீதியான வெற்றி தோல்விகளை மனதிற் கொள்ளாமல், துணிவுடன் பரீட்சார்த்த முயற்சியை கையிலெடுத்து, “அந்தநாள்” என்ற ஒரு புதுமைப் படைப்பை தமிழ் திரையுலகிற்கு அளித்து, ஆச்சர்யத்தை தந்தது ஏ வி எம் தயாரிப்பு நிறுவனம்.

ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவாவின் “ரஷோமான்” என்ற ஜப்பானிய திரைப்படத்தின் திரைக்கதை சாயலில் உருவான திரைப்படம்தான் “அந்தநாள்”. இந்த மர்ம திகிலூட்டும் துப்பறியும் படத்திற்கு, கதை மற்றும் திரைக்கதையை ஜாவர் சீதாராமன் வடிவமைக்க, படத்தை இயக்கியிருந்தார் வீணை எஸ் பாலசந்தர். “உலகப் போரின்போது ஜப்பான் நாட்டினருக்கு உளவு சொல்லும் ஒரு வானொலி பொறியாளர், அவரது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொலை செய்யப்படுகின்றார். கொலைக்கான பின்னணி என்ன? கொலை செய்தது யார்? அவரது மனைவியா? நண்பர்களா? அல்லது அக்கம் பக்கத்தினரா? என துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பதுதான் கதை.

பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளை உள்ளடக்கிய, ஆடல் பாடல் ஏதுமில்லாத முதல் தமிழ் திரைப்படமாக இயக்கியிருந்தார் வீணை எஸ் பாலசந்தர். ஜப்பான் நாட்டிற்கு உளவு சொல்லும் வானொலி பொறியாளராக நாயகன் கதாபாத்திரத்தில் சிவாஜிகணேசன் நடிக்க, அவரது மனைவியாக பண்டரிபாய் நடித்திருந்தார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதையின் நாயகன் கொல்லப்படுவதாக காட்டி, பின் துப்பறிவதாக வரும் திரைக்கதையில், ஒவ்வொரு விசாரணையின் போதும் ஓர் கதை. அப்படி வரும் ஒவ்வொரு விசாரணையின் போதும் கதாநாயகன் கொல்லப்படுகின்ற காட்சியை வெவ்வேறு கோணங்களில் திரையில் காட்டியிருப்பார் இயக்குநர் வீணை எஸ் பாலசந்தர்.

1954 தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இத்திரைப்படம், ஒரு புதிய உத்தியை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. மேலும் 1954ல் கொல்கத்தாவில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் என எதுவுமின்றி முதன் முதலாக ஏவிஎம்.,மிற்காக இயக்குநர் எஸ் பாலசந்தர் ஒரு படத்தை இயக்கி வந்தார். பாதி வளர்ந்த நிலையில் படத்தைப் பார்த்த ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தி அளிக்காததால், நடிகர் சிவாஜிகணேசனை வைத்து மீண்டும் ரீ ஷூட் பண்ண வேண்டும் என சொல்ல, அப்படி உருவான திரைப்படம்தான் இந்த “அந்தநாள்”.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் குறித்து வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் - துஷரா விஜயன்!தனுஷ் குறித்து வரும் ... விஜயின் முதல் கட்சி மாநாடு: திரை நட்சத்திரங்கள் வாழ்த்து விஜயின் முதல் கட்சி மாநாடு: திரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in