Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: பி.எஸ்.வீரப்பாவை கண்டுபிடித்த கே.பி.சுந்தராம்பாள்

09 அக், 2024 - 09:26 IST
எழுத்தின் அளவு:
Flashback:-KB-Sundarambal-discovers-PS-Veerappa


தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர வில்லன் பி.எஸ்.வீரப்பா. தனித்த குரலில் வீராப்பு பேச்சு, வெடி சிரிப்புமாய் கலக்கியவர். சினிமா பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் கோவில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வீரப்பாவை சினிமாவுக்கு அழைத்து வந்தது கே.பி.சுந்தராம்பாள்.
காங்கேயம்தான் வீரப்பாவுக்கு சொந்த ஊர். தாத்தா வீட்டில் வளர்ந்தார். தாத்தாவிற்கு உதவுவதற்காக கிடைத்த வேலைகளை செய்து வந்தார். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் இணைந்து கோவில் திருவிழாவில் நாடகம் போட்டார். அந்த நாடகத்தில் அவரே வில்லனாகவும் நடித்தார். அவரது நடிப்பை பார்த்து வியந்த மக்கள் தங்கள் ஊர் கோவிலில் வந்து நாடகம் போடுமாறு அழைத்தார்கள். பின்னர் அதனையே வருமானம் தரும் தொழிலாக மாற்றினார்.

ஒரு கோவில் திருவிழாவில் வீரப்பாவின் நாடகம் நடந்தது. அந்த கோவிலுக்கு கே.பி.சுந்தராம்பாள் சாமி கும்பிட வந்திருந்தார். மைக் இல்லாத அந்த காலத்தில் வீரப்பா பேசிய வில்லத்தனமான குரல் கே.பி.சுந்தராம்பாள் காதில் விழுந்தது. ஒரு ரசிகையை போல கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து நாடகத்தை பார்த்த அவர், நாடகம் முடிந்ததும் வீரப்பாவை சந்தித்து பாராட்டினார். சென்னை வந்தால் சினிமாவில் சேர்த்து விடுகிறேன் என்று கூறி தனது விலாசத்தை கொடுத்து வந்தார்.

சில நாட்களிலேயே சென்னை வந்த வீரப்பா கே.பி.சுந்தராம்பாளை சநதித்தார். அந்தக் காலத்தில் மிகப்பெரிய இயக்குநராகத் திகழ்ந்த எல்லீஸ் ஆர்.டங்கனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதி, அதை வீரப்பாவிடம் கொடுத்துப் போய்ப் பார்க்கச் சொன்னார் கே.பி.சுந்தராம்பாள். யாருக்குமே சிபாரிசு கடிதம் கொடுக்காத சுந்தராம்பாள் வீரப்பாவிற்கு கொடுத்ததை பார்த்த எல்லீஸ் ஆர்.டங்கன் வாய்ப்பைக் கொடுத்தார்.

1939ம் ஆண்டு, 'மணிமேகலை' எனும் படத்தில், அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கே.பி.சுந்தராம்பாளும் நடித்திருந்தார். பிறகு அடுத்தடுத்த படங்களில் வீரப்பாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியபடி இருந்தார் டங்கன். எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அவருக்கு வில்லனாக நடித்ததும் அவரின் புகழை உயர்த்தியது. பின்னர் வில்லன் நடிகராக வளர்ந்தார். பிற்காலத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இன்று பி.எஸ்.வீரப்பாவின் 113வது பிறந்த நாள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த ... 20 வருட சட்டப் போராட்டம்: ரூ.50 கோடி சொத்தை மீட்ட கவுண்டமணி 20 வருட சட்டப் போராட்டம்: ரூ.50 கோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in