Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பொய் புகார்களால் ஏற்படும் வலி; ஜெயசூர்யா வேதனை

01 செப், 2024 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Actor-Jayasurya-Breaks-His-Silence-On-Sexual-Harassment-Allegations


மலையாள திரை உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன என்று சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதுடன் தாங்கள் யாரால் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பது குறித்தும் வெளிப்படையான குற்றச்சாட்டாகவும் காவல்துறையில் புகாராகவும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஜெயசூர்யா இந்த நிகழ்வுகள் குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஒரு மாத காலமாகவே நான் எனது பர்சனல் வேலைகளுக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறேன். இப்படி என் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது உண்மையிலேயே என்னை மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்குகளை நான் சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறேன். எனது சட்ட உதவிக்குழு தற்போது இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுவாகவே ஒருவரை களங்கப்படுத்தும் விதமாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை வீசுவது என்பது யாருக்கும் மிகவும் எளிது. அதேசமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் சந்திக்கும் வலி மற்றும் வேதனைக்கு சற்றும் குறையாதது தான் இதுபோன்று பொய் புகார்கள் சுமத்தப்படும்போது எனக்கு ஏற்பட்டுள்ள வலியும் வேதனையும். பொய் என்பது எப்போதுமே உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால் நிச்சயமாக உண்மை தான் வெல்லும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் ரஞ்சித் மீது நடிகர் பாலியல் புகார் ; போலீஸ் வழக்கு பதிவுஇயக்குனர் ரஞ்சித் மீது நடிகர் ... முகேஷ் நல்ல மனிதர்.. ஆனால் நல்ல கணவர் அல்ல ; 2வது மனைவி கொடுக்கும் சர்டிபிகேட் முகேஷ் நல்ல மனிதர்.. ஆனால் நல்ல கணவர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in