நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! |
மிகப்பெரிய இயக்குனர்கள், ஹீரோக்கள் தங்களது படங்களின் இரண்டாம் பாகங்களை தொடங்குவது ஒருவகை. இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒரு வெற்றி படம் கொடுத்து அதன் பிறகு சரிவை சந்தித்து வரும் இயக்குனர், ஹீரோ அல்லது தயாரிப்பு நிறுவனம் கூட மீண்டும் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஏற்கனவே ஹிட்டான தங்களது படங்களின் இரண்டாம் பாகங்களை தற்போது எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடிகர் பரத் நடிப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான காளிதாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. நாளை முதல் இதன் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகர் பரத் தனது திரையுலக பயணத்தில் காதல், எம் மகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். அதன் பிறகு தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடி வந்த பரத்திற்கு காளிதாஸ் திரைப்படம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் விதமாக ஒரு டீசன்டான வெற்றியை கொடுத்தது. படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ செந்தில் என்பவர் இயக்கியிருந்தார்.
ஒரு கொலையை துப்பறியும் போலீஸ் அதிகாரியான பரத் கண்டுபிடிப்பதும் அந்த சமயத்தில் தனது நிஜ வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் குடும்ப சிக்கல் இவற்றை மையப்படுத்தி ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். முதல் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் இருவரும் இந்தப் படத்தில் அப்படியே தொடர்கிறார்கள்.