‛காட் பிளஸ் யூ மாமே...' : ‛குட் பேட் அக்லி' இரண்டாவது போஸ்டர் வெளியீடு | மீண்டும் அனிமல் பட இயக்குனர் உடன் இணையும் ராஷ்மிகா | சூர்யா நடிக்க இருந்த 'கர்ணா' டிராப்பா ? | தாமதமாகும் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில் | கமல் Vs ரஜினி, விஜய் Vs அஜித் : ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகள் | வருகிற கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் பேபி ஜான் | உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது : கமல் குறித்து ஷங்கர் பெருமிதம் | சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய கே.பி.ஒய்.பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி? | கோட் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மிகப் பிரம்மாண்டமான திரைப்பட நகரமான ராமோஜி பிலிம் சிட்டியை 1996ம் ஆண்டு ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் அமைத்தவர் ராமோஜி ராவ். சுமார் 1666 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலகத்தின் மிகப் பெரிய திரைப்பட நகரம் இது.
பிரம்மாண்டமான அரங்குகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்ற தொழில்நுட்ப வசதிகள் என அமைந்த ஸ்டுடியோ. இந்தியத் திரையுலகத்தின் பல்வேறு மொழிப் படங்களும் அங்கு தயாராகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ஸ்டுடியோவை நிர்மாணித்தவரும், ஈநாடு பத்திரிகை, டிவி ஆகியவற்றை நிறுவியவருமான ராமோஜி ராவ் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை மறைந்தார். அவருக்கு வயது 87.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பெத்தபருப்புடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1936ம் ஆண்டு பிறந்தவர். ஆந்திர, தெலுங்கானா மாநில அரசியலிலும் சக்தி வாய்ந்த நபராக இருந்தவர்.
2016ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கியுள்ளது.
“ஸ்ரீவாரிக்கி பிரேமலேகா, மயூரி, பிரதிகடனா, மௌன போராட்டம், மனசு மமதா, சித்ரம், நுவ்வே காவாலி” உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். 'பிரதிகடனா' என்ற படம் 'பூ ஒன்று புயலானது' என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி இங்கும் பெரும் வரவேற்பு பெற்று ஓடியது. அவர் தயாரித்த படங்கள் ஆந்திர மாநில நந்தி விருதுகள், தேசிய விருதுகள் உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளது.
ராமோஜி ராவ் மறைவுக்கு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.