Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல் | இரண்டாவது நாளில் 298.5 கோடி வசூலித்த கல்கி 2898 ஏடி | சுந்தர். சியின் ‛ஒன் டூ ஒன்' படத்தின் டிரைலர் வெளியானது! | சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? | ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளில் வெளியான புதிய பட அறிவிப்பு! | ஒரு தாய் மக்கள், அருந்ததி, ஜில்லா: ஞாயிறு திரைப்படங்கள் | விஜய் - த்ரிஷா, எம்ஜிஆர் - ஜெயலலிதா : ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா | விஸ்வரூபம் மற்றும் விக்ரம் படங்களில் மகாபாரத பாதிப்பு உண்டு : கமல் புதிய தகவல் | கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் பாசில் ஆவேசம் வசனம் | குருவாயூர் கோவிலில் இனிதே நடந்த மீரா நந்தன் திருமணம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ் பேக்: ஜென்சியை அழைத்து வந்தவரும்.. திருப்பி அனுப்பியவரும்..

30 மே, 2024 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Flashback:-The-one-who-brought-Jency...-and-the-one-who-sent-her-back...


யேசுதாசின் குரலை 'காந்த குரல்' என்பார்கள். அதேபோன்று பெண்களின் குரலில் காந்த குரல் கொண்டவர் ஜென்சி. ஒருவர் எந்த பாடலை பாடினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிற குரலையே காந்த குரல் என்பார்கள். கேரளாவில் மேடைகளில் பாடிக்கொண்டிருந்த ஜென்சியை இளையராஜாவிடம் அழைத்து வந்தார் யேசுதாஸ்.

“ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது. திறமையற்றவர்களை யேசுதாஸ் பரிந்துரை செய்யமாட்டார் என்பதால் ஜென்சியை பாடகியாக ஏற்றார் இளையராஜா. 'திருப்புரசுந்தரி' என்ற படத்தில் முதல் பாடல். அது அதிக கவனம் பெறவில்லை. இரண்டாவது பாடல் 'முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற ''அடி பெண்ணே'' தான் ஜென்சியை அடையாளம் காட்டியது.

அறிமுகமான அந்த 1978ம் வருடத்திலேயே அடுத்தடுத்து 5 பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் “என்னுயிர் நீதானே'' பாடல். அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று அவரே கூறியிருக்கிறார்.

அதன்பிறகு ஜென்சி பாடியது எல்லாமே தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்தான். இங்கிருந்த பி.சுசீலா, எஸ்.ஜானகிக்கு நிகராக வளர்ந்த ஜென்சி திடீரென காணாமல் போனார். ஒரு பாடல் பதிவுக்காக இளையராஜா அழைக்க, அவசர அவசரமாக கேரளாவில் இருந்து ரயிலில் கிளம்பினார் ஜென்சி. ரயில் தாமதமானதால் பாடல் பதிவு நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. அந்த பாடலை வேறு பாடகியை வைத்து முடித்து விட்டார் இளையராஜா.

தாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட ஜென்சி, ரயில் தாமதம் பற்றி இளையராஜாவிடம் சொன்னார். “நீ ரயிலில் பாடி பிழைச்சுக்கோ” என்று இளையராஜா சொல்லிவிட அந்த வார்த்தையை தாங்க முடியாமல் வெளியேறியவர், கேரளாவுக்கே சென்று விட்டார். அதன்பிறகு சில பாடல்கள் பாடினாலும் இளையராஜாவை பகைத்து கொள்ள விரும்பாதவர்கள், ஜென்சியை புறக்கணித்தார்கள். பின்னர் அவர் வருங்கால இசை கலைஞர்களான மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் பணியை தேர்வு செய்து கொண்டார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப்போகும் ராயன்: என்ன காரணம்?தள்ளிப்போகும் ராயன்: என்ன காரணம்? விஜய் படத்தில் நடிக்க விஜய்க்கு ஆசை விஜய் படத்தில் நடிக்க விஜய்க்கு ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vijay - coimbatore,இந்தியா
30 மே, 2024 - 08:05 Report Abuse
vijay இளையராஜா கோபப்பட்டதில் தவறு இல்லை. ரயில் தாமதம் அந்த காலத்தில் மிக அதிகம். திட்டிருக்கலாம், ஆனால் ரயிலில் பாடி பிழைச்சுக்கோ என்று சொன்னது மிக மிக தவறு. அதற்கு பிறகாவது, சமீப காலத்திலோ ஜென்சியை அழைத்து பேசி தனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டிருக்கலாம். மீண்டும் பாட வாய்ப்பெல்லாம் தந்திருக்கணும் என்று சொல்லவில்லை. ராஜா அவர்களே தனிப்பட்ட முறையில் ஜென்சியிடம் பேசி சமாதானம் அடைந்திருந்தால், என்ன சண்டை எப்படிப்பட்ட காயமேற்படுத்திய வார்த்தைகள் என்பது நமக்கு தெரியாமலே போயிருக்கும், ராஜா சாரின் மீதான மதிப்பும் அப்படியே இருந்திருக்கும். இப்போதும் ராஜா சாரின் மீதான, இசையின் மீதான, கர்வத்தின் மீதான மதிப்பும் அப்படியே இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான வார்த்தைகளை இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
30 மே, 2024 - 03:05 Report Abuse
Muralidharan raghavan இசைஞானியின் பெருமை உலகறியும். என்ன அவருக்கு கொஞ்சம் ஈகோ அதிகம். அதையும் விட்டுவிட்டால் முழுமையான மனிதர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in