முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

'ஹனு மான்' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் 300 கோடிக்கும் அதிகமான வசூல் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பிரசாந்த் வர்மா. இந்த ஆண்டு தெலுங்கில் வந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம்.
பிரசாந்த் வர்மா அடுத்ததாக இப்படத்தின் அடுத்த பாகமான 'ஜெய் ஹனுமான்' படத்தை இயக்க உள்ளார். இதற்கடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்தப் படம் டிராப் ஆகிறது என்றும் சொல்லி வந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் பிரசாந்த் வர்மா தரப்பில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். படத்திற்கான கதை முழுமையாகத் தயாராக உள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.