வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர். கடந்த ஞாயிறன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே, தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணைக்கு நேரில் வர கிரிஷ் தவிர்ப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




