புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர். கடந்த ஞாயிறன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே, தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணைக்கு நேரில் வர கிரிஷ் தவிர்ப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.