'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

மறைந்த நடிகரும், தேமுதிக., தவைலருமான விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதும் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார். இன்று(டிச., 29) தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி. தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பொருத்தமான ‛கேப்டன்' பெயர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நடிகர் விஜயகாந்த்தை இழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு முறை விஜயகாந்த் உடன் பழகினால் அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். நட்புக்கு இலக்கணமானவர். கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது. சினிமாகாரர்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது. நான் மருத்துவமனையில் இருந்தபோது தொந்தரவாக இருந்த கூட்டத்தை 5 நிமிடத்தில் விரட்டி அடித்தவர் விஜயகாந்த். மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கியபோது களத்தில் இறங்கி என்னை பூ போல் அங்கிருந்து கூட்டி வந்தவர் விஜயகாந்த். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் யார் என்றால் அது விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் : ‛‛அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மனவுறுதி கொண்ட மனிதர் அவர். எப்படியாவது உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு என அனைவரும் நினைத்தோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவர் சோர்வாக இருந்ததை பார்த்தபோது, எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது, வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்திருக்கிறோம்'' என்றார்.




