'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

தமிழ் ரீமேக் ஆன சிங்கம் சில வருடங்களுக்கு முன் பாலிவுட்டில் அஜய் தேவகன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அங்கே சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குனர் ரோஹித் ஷெட்டி தானாகவே உருவாக்கி இயக்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் தற்போது சிங்கம் அகைன் என்கிற பெயரில் இதன் மூன்றாவது பாகத்தை இயக்கி வருகிறார் ரோஹித் ஷெட்டி. இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே ரவுடிகளுடன் அஜய் தேவ்கன் மோதும் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத சமயத்தில் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனதால் பைட்டர் ஒருவர் விட்ட குத்து அஜய் தேவ்கனின் கண்களை பதம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் உடனடியாக வரவழைக்கப்பட்டு அஜய் தேவ்கனின் கண்களை பரிசோதித்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தினார்.
ஆனால் இன்னொரு பக்கம் ரோஹித் ஷெட்டி மற்ற ரவுடிகளையும் பைட்டர்களையும் வைத்து படமாக்க வேண்டிய மீதி காட்சிகளை இடைவெளி விடாமல் படமாக்கிக் கொண்டே இருந்தார். சில மணி நேரம் கழித்து அஜய் தேவ்கனுக்கு கண்களின் பாதிப்பு சரியானதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க துவங்கினார். வழக்கமாக இதுபோன்ற தருணங்களில் படப்பிடிப்பை சில நாட்களாவது நிறுத்திவிட்டு பின்னர் தொடர்வது தான் வழக்கம். ஆனால் இந்த படத்தை சூட்டோடு சூடாக முடிக்க வேண்டும் என்பதால் இயக்குனரும், ஹீரோவும் எந்தவித இடைவெளியும் விடாமல் ஒத்துழைப்பு கொடுத்து இந்த படத்திற்காக இயங்கி வருகின்றனர்.