நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‛லால் சலாம்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விக்ரமை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் பிறகு கதை கேட்டு பிடித்து, நடிக்க யோசித்து வந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக தருவதாகவும் தெரிவித்துள்ளது. இப்போது இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். சம்பளம் மட்டுமல்ல, படத்தில் அவரது கேரக்டரும் வலுவாக உள்ளதாம். அதனால் விக்ரம் ஒப்புக் கொள்வார் என்கிறார்கள். விரைவில் அவர் சம்மதம் சொன்னதோடு செய்தியோடு அறிவிப்பு வெளியாகலாம்.