நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‛லால் சலாம்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விக்ரமை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் பிறகு கதை கேட்டு பிடித்து, நடிக்க யோசித்து வந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக தருவதாகவும் தெரிவித்துள்ளது. இப்போது இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். சம்பளம் மட்டுமல்ல, படத்தில் அவரது கேரக்டரும் வலுவாக உள்ளதாம். அதனால் விக்ரம் ஒப்புக் கொள்வார் என்கிறார்கள். விரைவில் அவர் சம்மதம் சொன்னதோடு செய்தியோடு அறிவிப்பு வெளியாகலாம்.