இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
'இந்தியன் 2' படக்குழுவினர் அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் முடிவடைய இருக்கிறதாம். அதன்பின் இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்குள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், விஎப்எக்ஸ் வேலைகள் முடிவடைய வேண்டும். 'இந்தியன் 2' படத்தை முழுவதுமாக முடித்த பிறகுதான் 'கேம் சேஞ்சர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு ஷங்கர் செல்ல உள்ளாராம். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்கிறார்கள். இரண்டு படத்துக்குமே பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது, அதனால் தரத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என ஷங்கர் நினைக்கிறாராம்.