ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான செந்திலுக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் பீமரத சாந்தி நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஸ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிஷேகம் ஆகிய சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் தனக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று கோவிலுக்கு வந்த நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோவில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை மாலை மாற்றிக் கொண்டதுடன் சுவாமி அம்பாள் மற்றும் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் செந்திலின் மகன்கள் மணிகண்டபிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பூஜைகளை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.