கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தெலுங்கு திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து ஹிந்தியில் படங்களை இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக மாறியவர் ராம்கோபால் வர்மா. அவரது படங்கள் ரியலிஸ்டிக்காக இருக்கும் என்பதுடன் பல நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்பும். இன்னொரு பக்கம் அவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகளும் தங்களது பங்கிற்கு ஏதாவது சர்ச்சையை கிளப்புவதும் வழக்கம். இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தன்னுடைய பி டெக் டிகிரியை முடித்ததற்கான சான்றிதழை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து தற்போது தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பெற்றுள்ளார்.
ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் 1985ல் சிவில் இன்ஜினியரிங்கில் பி டெக் படிப்பை முடித்தார் ராம்கோபால் வர்மா. ஆனால் தொடர்ந்து, படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் சினிமாவில் நுழையும் ஆர்வத்தில் இருந்ததால் தனது டிகிரி சான்றிதழை இதுவரை வாங்காமலேயே இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திற்கு நேரிலேயே சென்று அந்த பட்டத்தை பெற்றுள்ளதுடன் அதுகுறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.