யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் |

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக கருத்தை மையமாக வைத்து கடந்த 2019ல் துவங்கப்பட்ட படம் கன்னித்தீவு. சுந்தர் பாலு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஸ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் சுபிக்ஷா என 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியிலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் உலகப் பெண்கள் தனமான மார்ச்-8ம் தேதி வெளியாக இருப்பது குறித்து படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு மற்றும் நாயகி வரலட்சுமி சரத்குமார் இருவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இது பற்றி வரலட்சுமி கூறும்போது, “பெண்களின் நட்பை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் அரிதாகவே படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த சுவாரசியமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம் அடைகிறேன். அதுமட்டுமல்ல நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாவது இன்னும் த்ரில்லிங்காக இருக்கிறது. பெண்கள் தினத்தில் வெளியாகும் இந்த படம் நேரடியாகவே ரசிகர்களை சென்றடையும் என்பதிலும் எனக்கு சந்தோசம் தான்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் வரலட்சுமி தமிழ, தெலுங்கு என இருமொழிகளில் நடித்துள்ள கொன்றால் பாவம் திரைப்படம் வரும் மார்ச்-10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.