போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் மோஷன் கேப்சரிங் படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தின் வெளியீடு அடுத்த வருடம் 2023ம் ஆண்டு ஜுன் 16ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் படத்தை 2023 ஜனவரி 12ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள்.
ஆனால், படத்தின் டீசர் வெளியானதும் அது பற்றிய விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் மிகச் சுமாராக இருக்கிறது என சாதாரண ரசிகர்களும் கமெண்ட் அடித்தார்கள். அதன்பின் மும்பை, ஐதராபாத் ஆகிய ஊர்களில் படத்தின் டீசரை 3டியில் திரையிட்டுக் காட்டி '3 டி'யில் பார்த்தால்தான் சிறப்பாக இருக்கும் என்றும் சமாளித்தார்கள்.
இந்நிலையில் முழு படத்தை படக்குழுவினர் திரையிட்டுப் பார்த்ததாகவும், அவர்களுக்கே படத்தின் விஎப்எக்ஸ் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமா பிரபலங்கள் சிலரும் 'இராமாயணக்' கதை என்பதால் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்திற்கு உருவாக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பட வெளியீட்டைத் தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்களாம். அதோடு படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
ஆறு மாத கால தாமதம், கூடுதல் செலவு ஆகியவை படம் வெளியாகும் போது அதன் தரம் அனைத்தையும் மறக்கச் செய்யும் அளவிற்கு இருக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.