சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மலையாள திரையுலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் மினிமம் கியாரண்டி நடிகராக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016ல் ஜெயசூர்யா கொச்சி கடவந்தரா பகுதியில் தான் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள சிலவன்னூர் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள 3.7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அப்படி ஆக்கிரமித்த இடத்திற்கு இடத்தை சுற்றி தடுப்புச்சுவர் எழுப்பி உள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதேசமயம் அப்போது அந்த வழக்கு விசாரணையின்போது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், அது புறம்போக்கு நிலம் என்றாலும் குழந்தைகள் விளையாடும்போது ஏரிகள் தவறி விழுந்து விடாமல் இருக்கவே சுற்றுச்சுவர் அமைத்தேன் என்றும் அதனால் அதை இடிக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார் ஜெய்சூர்யா.
அப்போதைக்கு நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்பை இடிக்க இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில்தான் அந்த வழக்கு சூடுபிடித்து ஜெயசூர்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.