ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மணிரத்னத்திடம் உதவி இயக்குராக இருந்து, ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகரானவர் சித்தார்த். தமிழ் படங்களை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்தார், இந்தி படங்களிலும் நடித்தார். மேக்னா என்பவரை திருமணம் செய்த சித்தார்த் 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவர் ஸ்ருதிஹாசன், சமந்தாவை காதலித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருடன் நடித்தவர் அதிதிராவ். இவர் தமிழில் சிருங்காரம் படத்தில் நடித்து இங்கு வாய்ப்பு கிடைக்காமல் மும்பை சென்று பாலிவுட் நடிகை ஆனார். அதன்பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பி காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹேய் சினாமிகா படங்களில் நடித்தார்.
சித்தார்த்தும், அதிதிராவும் காதலித்து வருவதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சமீப காலமாக தகவல்கள் வெளியானது. இதனை இருவரும் ஒப்புக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சித்தார்த்தும், அதிதிராவும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். ஒன்றாக அமர்ந்து விழாவை ரசித்தார்கள், மேடையில் ஆயுத எழுத்து படத்தின் பாடலை இசை குழுவினர் பாடியபோது சித்தார்த், திரிஷா துள்ளி குதித்தனர். அதிதிராவ் அவரை உற்சாகப்படுத்தினார்.
இதன் மூலம் இருவரின் காதல் உறுதியாகி இருப்பதாகவும், இதனை அவர்கள் வெளிஉலகத்துக்கு அறிவிப்பதற்காகவே ஒன்றாக விழாவுக்கு வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.