தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் கூறிய அறிவுரை ஒன்று வைரலாகி உள்ளது. இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர், அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என அறிவுரை கூறியுள்ளார். மேலும் காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும் சூழலுக்கு வழிவகுக்கும் என ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த சமூகப்பதிவு வைரலாகி வருகிறது.