மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இந்த தொடரில் மனிஷா ஜித், திவ்யபத்மினி, சந்தோஷ், மனுஷ், அம்மு ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை கதைக்களமாக இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அண்மையில் 100வது எபிசோடை கடந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினர். இனி வரும் நாட்களில் ஹீரோயினின் திருமணம் என சுவாரசியமான எபிசோடுகள் வர இருக்கிறது.
இந்நிலையில், தொடரின் நாயகி மனிஷா ஜித் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அவர் நடித்த எபிசோடுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் எனவும், அதன்பிறகு புது ஹீரோயின் நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் எனவும் செய்திகள் உலா வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்த மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியுள்ள நிலையில், புதிதாக யார் கதையின் நாயகியாக நடிக்கப்போகிறார்? அவரால் மனிஷா ஜித்தின் இடத்தை நிரப்ப முடியுமா? என்ற கேள்வி நேயர்களிடம் எழுந்துள்ளது.




