மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இந்த தொடரில் மனிஷா ஜித், திவ்யபத்மினி, சந்தோஷ், மனுஷ், அம்மு ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை கதைக்களமாக இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அண்மையில் 100வது எபிசோடை கடந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினர். இனி வரும் நாட்களில் ஹீரோயினின் திருமணம் என சுவாரசியமான எபிசோடுகள் வர இருக்கிறது.
இந்நிலையில், தொடரின் நாயகி மனிஷா ஜித் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அவர் நடித்த எபிசோடுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் எனவும், அதன்பிறகு புது ஹீரோயின் நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் எனவும் செய்திகள் உலா வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்த மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியுள்ள நிலையில், புதிதாக யார் கதையின் நாயகியாக நடிக்கப்போகிறார்? அவரால் மனிஷா ஜித்தின் இடத்தை நிரப்ப முடியுமா? என்ற கேள்வி நேயர்களிடம் எழுந்துள்ளது.