Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மஞ்சு வாரியர் புகாரில் கைதான இயக்குனர் சபதம்

17 ஜூலை, 2022 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Director-Sanalkumar-decision

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்பவர் நடிகை மஞ்சு வாரியர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் மஞ்சு வாரியாரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சிலரால் அவர் ஆபத்தில் சிக்கியுள்ளார் என்றும் அதில் கூறியிருந்தார். மேலும் இதே கருத்தை அவர் வீடியோவாகவும் வெளியிட்டார்.. இதைத்தொடர்ந்து தன்மீது தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் அவதூறு தகவல்களை வெளியிடுவதன் மூலம் மிரட்டல் விடுக்கிறார் என சனல்குமார் சசிதரன் மீது மஞ்சு வாரியர் போலீஸில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.. மஞ்சு வாரியர் மீது சனல்குமார் சசிதரன் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டதற்கு காரணம் அவர் இயக்கிய படம் என்கிற படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் அவர் மஞ்சு வாரியர் மீது அதிக உரிமை எடுத்துக் கொண்டதுதான் அவரது இந்த பதிவுக்கு காரணம்.. ஆனால் இதை மஞ்சுவாரியர் விரும்பவில்லை என்பதுதான் சனல்குமார் சசிதரன் மீதான புகாராக வெளிப்பட்டது.

தற்போது ஜாமீனில் வெளிவந்த இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இனி, தான் படங்களையே இயக்கப்போவதில்லை என்றும் தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என நிரூபித்த பின்னரே தான் படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார் சனல்குமார் சசிதரன்.. ஒருவேளை தன் உயிர் உள்ளவரை அப்படி நடக்காவிட்டால், இனி படமே இயக்காமல் ஏற்கனவே ஏழு படங்களை இயக்கியுள்ள மனநிறைவுடன் இருந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார் சனல் குமார் சசிதரன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டி படத்தில் வில்லனாக வினய்மம்முட்டி படத்தில் வில்லனாக வினய் குறும்பட இயக்குனரின் படத்தில் ஊர்வசி - பார்வதி குறும்பட இயக்குனரின் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in