10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி ஆகியுள்ள படம் மகள். இதில் அவருடன் ஜெயராம், தேவிகா சஞ்ய் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் அம்மா மகளின் உறவு மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மகளாக நடித்துள்ள தேவிகா சஞ்சய் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீடியாக்களிடம் பேசும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த வீடியோவும், படமும் வைரலாகி வருகிறது.
அவர் கூறியிருப்பதாவது: எனது இதயம் நிறைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் நான் அழுதேன், இன்றுவரை அழுது கொண்டிருக்கிறேன். எனது கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது முதல் படமே வெற்றிப் படமாகவும், எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படமாகவும் அமைந்தது இறைவன் கொடுத்து வரம்.
சத்யன் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், சீனிவாசன் சார், சித்திக் சார் உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, உங்களோடு திரையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி . என்று கூறியுள்ளார் தேவிகா.




