காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் சென்சார் சான்றிதழ் கூட இல்லாமல் தான் ரிலீஸாகின்றன. அப்படி மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான சுருளி திரைப்படம், தற்போது மீண்டும் ஓடிடியில் தொடர்ந்து ஒளிபரப்பாவதற்கு போலீஸாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர். ஓடிடி வரலாற்றில் இப்படி நடப்பது இதுதான் முதன்முறை. காரணம் ரொம்பவே விசித்திரமானது.
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்காட்டு வித்தியாசமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. இவர்தான் இந்த சுருளி படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ரொம்பவே மோசமானது” என்று கூறி இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு ஏற்ற படமா என காவல்துறையில் உள்ள மூன்று அதிகாரிகள் விசாரித்து அதற்கான சான்று தரவேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் சுருளி படத்தை பார்த்துவிட்டு போலீஸ் தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.