Advertisement

சிறப்புச்செய்திகள்

முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த கதையை கேட்டபோதே கண்கலங்கி விட்டேன் - ரஜினி

15 நவ, 2021 - 06:07 IST
எழுத்தின் அளவு:
I-tear-when-hear-Annaatthe-story-says-Rajini

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, சூரி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இமான் இசையமைத்து இருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூல் சிறப்பாக இருந்தது.

இந்நிலையில் அண்ணாத்த படம் அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலியில் பேசி உள்ளார். அதில், ‛‛ ‛பேட்ட, விஸ்வாசம்' படம் ஒரே நேரத்தில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. எனக்கு விஸ்வாசம் படத்தை பார்க்க ஆவலானது. பாதி படம் முடியும் போது படத்தில் அப்படி என்ன இருக்கிறது என யோசித்தேன். ஆனால் அதன் பின் படம் போகப்போக, படத்தின் நிறமே மாறிவிட்டது. க்ளைமாக்ஸ் பிரமாதம், என்னை அறியாமல் கைதட்டி விட்டேன்.

அதன் பின், இயக்குனர் சிவாவை சந்திக்க வேண்டும் என எண்ணினேன். என் வீட்டுக்கே அவர் வந்தார்; வாழ்த்தினேன். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. குழந்தை மாதிரி இருந்தார்.அவரிடம், ‛எனக்காக கதை இருக்கா?' என கேட்டேன். ‛ஹிட் தர வேண்டும்' என்றேன். அது சுலபம் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கதைக்கு 15 நாள் அவகாசம் கேட்டார். 12 நாளில் வந்து கதை சொன்னார். கதையை சொல்ல சொல்ல கிளைமாக்ஸில் என்னையும் அறியாமல் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. அப்படியே படமாக்குங்கள் என்றேன். அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று சிவா சொல்லி அடித்துள்ளார். ண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவாவுக்கு நன்றி. அண்ணாத்த என் வாழ்வில் மறக்க முடியாத முடியாத படம்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்?நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்? கண்மணியாக நயன்தாரா கண்மணியாக நயன்தாரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in