அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, கடந்த சில வாரங்களாகவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் அடிக்கடி அடிபட்டு வந்தார். கணவர் நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் முதல் முறையாக, தனது தோழியுடன் 'சர் தம் யாத்ரா' சென்றார். அந்த சுற்றுப் பயணம் முடிந்து ஐதராபாத் திரும்பிய சமந்தா அடுத்து ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாதனா சிங் ஆகியோருடன் விமான நிலைய காத்திருப்பு அறையிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, 'வெளிநாடு செல்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருடன் பழகிய காரணத்தால் தான் நாக சைதன்யா அவரை விட்டுப் பிரிந்ததாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.