அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, கடந்த சில வாரங்களாகவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் அடிக்கடி அடிபட்டு வந்தார். கணவர் நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் முதல் முறையாக, தனது தோழியுடன் 'சர் தம் யாத்ரா' சென்றார். அந்த சுற்றுப் பயணம் முடிந்து ஐதராபாத் திரும்பிய சமந்தா அடுத்து ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாதனா சிங் ஆகியோருடன் விமான நிலைய காத்திருப்பு அறையிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, 'வெளிநாடு செல்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருடன் பழகிய காரணத்தால் தான் நாக சைதன்யா அவரை விட்டுப் பிரிந்ததாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.