என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, கடந்த சில வாரங்களாகவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் அடிக்கடி அடிபட்டு வந்தார். கணவர் நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் முதல் முறையாக, தனது தோழியுடன் 'சர் தம் யாத்ரா' சென்றார். அந்த சுற்றுப் பயணம் முடிந்து ஐதராபாத் திரும்பிய சமந்தா அடுத்து ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாதனா சிங் ஆகியோருடன் விமான நிலைய காத்திருப்பு அறையிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, 'வெளிநாடு செல்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருடன் பழகிய காரணத்தால் தான் நாக சைதன்யா அவரை விட்டுப் பிரிந்ததாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.